
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு மணிமகுடம் சேர்த்து வருபவர் சூரியகுமார் யாதவ், மேலும் இறுதி வரை நின்று இந்திய அணிக்கு போராடி பல வெற்றிகளை பெற்று தந்து வருபவர் விராட் கோலி.
இருவரையும் தவிர்த்து விட்டு தற்போது நடைபெறும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அப்படி ஒரு செயலை செய்து இருக்கிறார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்.
பந்த் தனது கனவு அணியை தேர்வு செய்திருக்கிறார். ஐந்து பேர் கொண்ட இந்த அணியில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருக்கும் இடம் கொடுக்கவில்லை. இரண்டு பேட்ஸ்மேன்களையும், ஒரு ஆல்ரவுண்டரையும், ஒரு சுழல் பந்துவீச்சாளர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளரையும் உள்ளடக்கிய ஐந்து பேர் கொண்ட இந்த அணியில், முதல் வீரராக ஜோஸ் பட்லரை தேர்வு செய்து, “அவர் இல்லாமல் இந்த அணி பலம்பொருந்தியதாக இருக்காது.” என்றார்.