Advertisement

ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெற வேண்டும்? - ஏபி டி வில்லியர்ஸ்!

கேப்டனாக மட்டுமல்லமல், ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் ரோஹித் சர்மா எதற்காக ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெற வேண்டும்? - ஏபி டி வில்லியர்ஸ்!
ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெற வேண்டும்? - ஏபி டி வில்லியர்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 13, 2025 • 11:48 AM

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 13, 2025 • 11:48 AM

இதன்மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதேசமயம் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய் ஆணி கைப்பற்றும் இரண்டாவது ஐசிசி கோப்பை இதுவாகும். இந்நிலையில் இப்பொட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும், அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடை செய்தது. 

Trending

ஆனால் தான் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தில் இல்லை எனவும், அதனால் இதுகுறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். இந்நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகும், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த பல பேச்சுகள் எழுந்து வருவதாக முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “மற்ற கேப்டன்களுடன் ஒப்பிடும்போது, ​​ரோஹித்தின் வெற்றி சதவீதத்தைப் பாருங்கள், அது கிட்டத்தட்ட 74% ஆகும், இது கடந்த காலத்தின் வேறு எந்த கேப்டனையும் விட கணிசமாக எண்ணிக்கையை விட அதிகம். அவர் தொடர்ந்து விளையாடினால், எல்லா காலத்திலும் சிறந்த ஒருநாள் கேப்டன்களில் ஒருவராக மதிப்பிடப்படுவார். ரோஹித் தான் ஓய்வு பெறப் போவதில்லை என்றும், வதந்திகள் பரவுவதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

என்னை கேட்டால் அவர் ஏன் ஓய்வு பெற வேண்டும்? கேப்டனாக மட்டுமல்லமல், ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அவர் ஓய்வு பெறுவது நல்லதல்ல. மேலும் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியிலும் அவர் அணிக்கு அருமையான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் 76 ரன்களை விளாசி இருந்தர். மேலும் ஒவ்வொரு  முறையும் அவர் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்து கொடுப்பதுடன், அணியின் அழுத்தத்தையும் குறைக்கிறர்.

Also Read: Funding To Save Test Cricket

அதனால் தற்போது ரோஹித் சர்மா ஓய்வு பெற எந்த காரணமும் இல்லை. எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள எந்த காரணமும் இல்லை. அவரது சாதனை அவருக்காகவே பேசுகிறது. அது மட்டுமல்ல, அவர் தனது ஆட்டத்தையும் ஓரளவு மாற்றியுள்ளார். அதனால் என்னைப் பொறுத்தவரையில் அவர் இன்னும் சிறிது காலம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement