
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான இரு அணி வீரர்களையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இரு அணி வீரர்கள் தற்சமயம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, வங்கதேச தொடரில் கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கேஎல்ராகுல் எப்படிப்பட்ட சிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய அணியின் தரப்பிலிருந்து அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கேஎல் ராகுல் சதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 80 ரன்கள் குவித்தார். அதன் பின் அவருக்கு காயம் ஏற்பட்டது. துரதிருஷ்டவசமாக, அவரால் அதன் பின் நடைபெற்ற போட்டிகளில் விளையாட முடியவில்லை. இருப்பினும் அவர் தனது கடைசி போட்டியின் போது எப்படியான ஃபார்மில் இருந்தாரோ அதே ஃபார்மில் அவர் வங்கதேசத்து எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்.