Advertisement
Advertisement
Advertisement

பார்டர் கவாஸ்கர் தொடர்: ஒரு போட்டியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா!

எதிர்வரும் 2024-25 ஆம் ஆண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தவறவிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஒரு போட்டியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா!
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஒரு போட்டியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 11, 2024 • 12:00 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 11, 2024 • 12:00 PM

அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.  அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளது.

Trending

இதனால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. 

அதன்படி, எதிர்வரும் 2024-25 ஆம் ஆண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை ரோஹித் சர்மா தவறவிடலாம் என்று பிசிசிஐயிடம் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி நவம்பர் 22-ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற உள்ளது, இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 6ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இருப்பினும் ரோஹித் சர்மா விளையாடதற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரின் தொடக்கத்தில் இரண்டு டெஸ்டில் ஒன்றைத் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. ரோஹித் ஒரு டெஸ்டில் விளையாடாமல் போனால் அவருக்குப் பதிலாக, உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read: Funding To Save Test Cricket

முன்னதாக வரவுள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டை மூன்றாவது தொடக்க வீரராக களமிறக்க பிசிசிஐ திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்சமயம் ரோஹித் சர்மா ஒரு போட்டியில் இருந்து விலகவுள்ளது அத்தகவலை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அதேசமயம் ரோஹித் சர்மா விலகும் பட்சத்தில் இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்துவார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement