
லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு இந்திய அணி நான்கு கட்டமாக இங்கிலாந்து சென்று தனது பயிற்சியைத் தொடங்கியது. இந்திய டெஸ்ட் அணியின் வீரர் புஜாரா இங்கிலாந்து கவுண்டி அணிக்கு முன்கூட்டியே விளையாட சென்று விட்டார்.
ஆஸ்திரேலியா அணியில் வார்னர் மட்டுமே ஐபிஎல் தொடரில் இந்தமுறை அதிக காலம் விளையாடினார். ஸ்மித், லபுஷாக்னே ஆகிய சில வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று கவுன்டி போட்டிகளில் விளையாடினார்கள். உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடம் இன்று தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பற்றிய எதிர்பார்ப்பு எக்கச்சக்க அளவில் நிலவுகிறது.
இந்த சமயத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில விஷயங்களை மனம் விட்டு பேசி இருக்கிறார். அதில் ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் இருவர் பற்றியும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.