Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை 2025: சர்வதேச கிரிக்கேட்டில் ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா?

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சர்வதேச கிரிக்கேட்டில் ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா?
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சர்வதேச கிரிக்கேட்டில் ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 08, 2025 • 01:10 PM

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (மார்ச் 9) நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 08, 2025 • 01:10 PM

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஒருவர் ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவும் பட்சத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும், அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Trending

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின் அடிப்படியில், “சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவினால், இந்திய அணி கேப்ட்ன் ரோஹித் சர்மா ஓய்வு பெற வாய்ப்புள்ளது. மறுபுறம், இந்திய அணி கோப்பையை வென்றால், ரோஹித்தின் முடிவு என்ன என்பது இப்போதைக்கு முடிவு செய்யப்படவில்லை. இரண்டு சூழ்நிலைகளிலும், ஓய்வு பெறுவதா இல்லையா என்பதை அவர் தான் முடிவு செய்வார்” என்று கூறியுள்ளனர்.

மேலும், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா விலகுவது உறுதி என்று கூறப்படுகிறது. ஏனென்றால், 2027 உலகக் கோப்பைக்கு புதிய கேப்டனை தயார் செய்ய இந்திய அணி விரும்புகிறது. ரோஹித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றால், அவர் ஒரு வீரராக ஒருநாள் அணியில் நீடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரோஹித் சர்மா தனது கேப்டன் பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் ஆகியோர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்கெனவே இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் உள்ளது. அதேசமயம் ஷுப்மன் கில் தற்போதைய இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

முன்னதாக கடந்த 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா திடீரென சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பையின் வெற்றிடைந்தாலும், தோல்வியடைந்தாலும் ரோஹித் ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement