-lg1-mdl.jpg)
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 07) கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனெவே இலங்கை அணி இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றுள்ள உத்வேகத்துடனும், அதேசமயம் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனையில் இந்திய அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், இலங்கை அணிக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அடுத்தடுத்து அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.