
Rohit Sharma will leave for England on June 20, no injury concern for India captain (Image Source: Google)
இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான டி20 தொடர் முடிந்த பிறகு அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த மாதம் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்கும் 2
போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயரை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.
இந்த தொடர் முடிந்ததும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 1 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக 5 போட்டிகள் கொண்ட தொடர் 4 போட்டிகளோடு முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மீதம் இருக்கும் ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி நடைபெறுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூலை 7 அன்றும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12 அன்றும் தொடங்குகின்றன.