
ஐபிஎல் தொடரின் ஐந்தாவது ஐந்தாவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியிடம் மும்பை அணி படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் தொடர்ந்து 11-வது முறையாக மும்பை அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 171 ரன்கள் எடுத்தது.
இந்த இலக்கை ஆர்சிபி அணி 16 புள்ளி இரண்டாவது ஓவரிலேயே வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 82 ரன்களையும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 73 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “பேட்டிங்கில் முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் சிறப்பான தொடக்கத்தை எட்ட முடியவில்லை. எனினும் திலக் வர்மா மற்றும் சில பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். இதே போன்று பந்துவீச்சிலும் நாங்கள் சரியாக செயல்படவில்லை. இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இதனை பயன்படுத்திக் கொண்டு திலக் வர்மா அதிரடியாக விளையாடி இருக்கிறார்.