Advertisement

கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வட் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட்
கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட் (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 10, 2025 • 09:16 PM

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் தொடக்க வீரராகவும் அறியப்படுபவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் இந்திய அணிக்காக இதுவரை 23 டி20 போட்டிகளிலும் 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிவுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 10, 2025 • 09:16 PM

இதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களுடன் 633 ரன்களையும், 6 ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 115 ரன்களையும் எடுத்துள்ளார். இருப்பினும் ஒவ்வொரு முறையும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த நிலையிலும் அவரது இடம் இந்திய அணியில் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளது. 

மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், தொடரின் பாதியில் காயம் காரணமாக விலகினார். அதன்பின் தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய ஏ அணியின் ஒரு அங்கமாக ருதுராஜ் கெய்க்வாட் இருக்கும் நிலையிலும், அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பானது கிடைக்கவில்லை. இதனால் இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதிசெய்யும் முயற்சியில் ருதுராஜ் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் தான இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பு ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கிடைத்துள்ளது. அதன்படி கவுண்டி கிரிக்கெட்டில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக அவர் யார்க்ஷயர் அணியுடன் இணைய உள்ளார். இதன் மூலம் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் யார்க்ஷயர் அணிக்காக விளையாடுவார் என்று கூறப்படுகிறது. 

Also Read: LIVE Cricket Score

யார்க்ஷயர் அணியில் இணைந்தது குறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “இங்கிலாந்து உள்நாட்டு சீசன் முழுவதும் யார்க்ஷயருடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாட்டில் கிரிக்கெட்டை அனுபவிப்பது எப்போதும் என்னுடைய இலக்காக இருந்து வருகிறது, இங்கிலாந்தில் யார்க்ஷயரை விட பெரிய கிளப் எதுவும் இல்லை. மேலும் இந்த சீசனின் முக்கியமான பகுதியாக இருக்கும் போட்டியில் களமிறங்குவது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement