
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நம்பர் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெறும் இது, செஞ்சூரியன் நகரில் நடைபெறவுள்ளது. இத்தொடரை வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் அடங்கிய வலுவான இந்திய அணி களமிறங்க உள்ளது.
சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் விளையாடிய விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் இத்தொடரில் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 765 ரன்கள் குவித்த விராட் கோலி ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரராக மாபெரும் உலக சாதனை படைத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
அதேபோல இறுதிப்போட்டி உட்பட அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா கிட்டத்தட்ட 600 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி நல்ல ஃபார்மில் உள்ளார். அதனால் இந்த 2 ஜாம்பவான் வீரர்களும் இம்முறை தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க போராடுவார்கள் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.