
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற இத்தொடரில் பல சுவாரஷ்யமான சம்பவங்களும் அறங்கேறியது. இதில் மிகமுக்கியமானது ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மீது கொண்டுவந்தது. ஏனெனில் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியின் நாதன் மெக்ஸ்வீனி இடம்பிடித்திருந்தார்.
ஆனால் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சோபிக்க தவற நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டார். தனது முதல் போட்டியிலேயே உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ரசிகர்களின் மதிப்பை பெற்றார். ஆனால் அதேசமயம் இதனால் கடுப்பான இந்திய வீரர் விராட் கோலி வேண்டுமென்றே சாம் கொன்ஸ்டாஸை இடிக்க பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது.