
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுடதது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 03ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றாலோ அல்லது போட்டி சமன்செய்தாலோ தொடரை வெல்லும் என்பதால் கடுமையாக போராடும். அதேசமயம் தொடரை சமன்செய்யும் நோக்குடன் இந்திய அணி இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதால் கேஎல் ராகுலை தொடக்க வீரராக கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் யோசனை வழங்கினார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கார், இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் இனி கே எல் ராகுல் நடுவரிசையில் தான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.