
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தன் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அந்தவகையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் அவர் 41 ரன்களைச் சேர்த்ததன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் ராஜஸ்தான் ரயல்ஸ் அணிக்காக 4000 ரன்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 4ஆயிரம் ரன்களைச் சேர்த்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
அவருக்கு அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடுத்த வீரர்கள் பட்டியலில் ஜோஸ் பட்லர் (3055), அஜிங்கியா ரஹானே (2810) மற்றும் ஷேன் வாட்சன் (2372) போன்ற வீரர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல்லில் மொத்தம் 177 போட்டிகளில் விளையாடியுள்ள சாம்சன், 4679 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 149 போட்டிகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், 28 போட்டிகள் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காகவும் விளையாடிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.