
இந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்தது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் இதில் ரிஷப் பந்திற்கு மட்டுமே தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தன. மாறாக சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பானது கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக ரிஷப் பந்த் அடுத்தடுத்த போட்டிகளில் சரிவர ரன்களைச் சேர்க்க தவறிய நிலையிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், “தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முன் நான் பிளேயிங் லெவனில் இருக்க போகிறேன் என்று அணி நிர்வாகம் என்னிடம் தெரிவித்திருந்தது. இதனால் நான் அந்த போட்டிகாக தீவிரமாக என்னை தயார்செய்து கொண்டேன். மேலும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட போகிறோம் என்ற மகிழ்ச்சியிலும் நான் இருந்தேன்.