Advertisement
Advertisement
Advertisement

இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து கௌதம் கம்பீர் கருத்து!

அடுத்த டி20 உலகக் கோப்பை குறித்தும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அணுக வேண்டிய முறை குறித்தும் கௌதம் கம்பீர் அதிரடியான சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 30, 2022 • 11:49 AM
Selectors Have To Take The Call Overlooking Beyond Rohit, Virat For Next T20 World Cup: Gautam Gambh
Selectors Have To Take The Call Overlooking Beyond Rohit, Virat For Next T20 World Cup: Gautam Gambh (Image Source: Google)
Advertisement

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆட்ட அணுகுமுறை மிக மோசமாக இருந்தது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் கே எல் ராகுல் இருவரது ஆட்டத்திலும் தைரியமும் நம்பிக்கையும் காணப்படவில்லை.

டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா அதிரடியான ஆக்ரோஷமான முறையில் விளையாடுவதை அணியின் கலாச்சாரமாக மாற்றுவோம் என்று கூறி அதன்படியே விளையாடியும் வந்தார்கள். ஆனால் அதை ஆஸ்திரேலியாவில் கொண்டு வந்து செயல்படுத்த தவறி மொத்த அணியையும் அரை இறுதியில் படுதோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறினார்கள்.

Trending


இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மெதுவாக விழித்துக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக கொண்டுவரப்பட்டதோடு ஒரு நாள் போட்டி அணிக்கும் துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டு இருக்கிறார். மேலும் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் டி20 போட்டி அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல் மூத்த வீரர்களான சிகர் தவன் புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்களும் கழட்டி விடப்பட்டு இருக்கிறார்கள். 

அதே சமயத்தில் இளம் வீரர்களான இஷான் கிஷன், சஞ்சு சாம்சங், உம்ரான் மாலிக், ராகுல் திரிபாதி போன்றவர்கள் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் அடுத்த டி20 உலகக் கோப்பை குறித்தும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அணுக வேண்டிய முறை குறித்தும் கௌதம் கம்பீர் அதிரடியான சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “தேர்வாளர்களுக்கு நல்ல தெளிவு இருக்க வேண்டும். தேர்வாளர்கள் மற்றும் வீரர்களுக்கு இடையே நல்ல தொடர்பும் இருக்க வேண்டும். தேர்வாளர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோரை தாண்டி சிந்திப்பதாக இருந்தால் அதை தாராளமாக செய்யட்டும். நிறைய கிரிக்கெட் நாடுகள் அதைத்தான் செய்திருக்கின்றன .

தேர்வாளர்கள் இப்படி இவர்களை தாண்டி தைரியமான முடிவுகளை எடுக்கும் பொழுது வெளியிலிருந்து அழுகிறார்கள். ஆனால் இது தனி நபர்களை பற்றிய விஷயம் கிடையாது. அடுத்த உலக கோப்பைக்கு நீங்கள் எப்படி செல்ல விரும்புகிறீர்கள்? நீங்கள் வெற்றி அடைய விரும்புகிறீர்கள். அந்தக் கனவை இவர்களால் அடைய முடியாத போது சூரியகுமார் போன்ற இளையவர்களால் அதை அடைய முடியும்.

தனிப்பட்ட முறையில் என்னை கேட்டால் இப்படி நடப்பது கடினமான ஒன்றுதான். சூரியகுமார் இசான் போன்ற இளம் வீரர்களை அணியோடு கலக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா இருக்கிறார் மேலும் பிரித்விஷா, சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி போன்ற வீரர்களை அணிக்குள் வைக்க முயற்சி செய்வேன். இவர்களால் அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement