
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி கண்டு முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொடர் தொடங்கியது முதல் தற்போது வரை ஆஸ்திரேலிய அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அதுவும் இந்திய பிட்ச்-கள் தான் மோசமாக உள்ளது எனக்கூறி வருகின்றனர்.
ஆனால் ஆஸ்திரேலிய அணி கூறியதை போல இந்த முறை பிட்ச்-ல் பெரியளவில் சுழல் ஏற்படவில்லை என்பது தான் உண்மை. ஆஸ்திரேலிய அணியின் இந்த தோல்விக்கு அவர்களின் அதிகப்படியான சிந்தனைகளும், பிட்ச் எப்படி இருக்குமோ? என்ற அதிகப்படியான பயமும் தான் காரணம் என இந்திய வல்லுநர்கள் கூறி வருகின்றனர். பேட்டிங் சொதப்பல்கள் தெளிவாக தெரிந்தன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஐசிசி நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், முதல் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற டெல்லி மற்றும் நாக்பூர் பிட்ச்-கள் இரண்டுமே சுமாரான களங்கள் தான் என ஐசிசி தெரிவித்திருக்கிறது. மேட்ச் நடுவரான ஜிம்பாப்வேவை சேர்ந்த ஆண்டி பைக்ராஃப்ட் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த ரேட்டிங் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.