Advertisement

ஸ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும் - ஷஷாங்க் சிங்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் தான் ஆட்டமிழந்த விதத்தை கண்டு ஸ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும் என பஞ்சாப் கிங்ஸின் ஷஷாங்க் சிங் கூறிவுள்ளார்.

Advertisement
ஸ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும் - ஷஷாங்க் சிங்
ஸ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும் - ஷஷாங்க் சிங் (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 08, 2025 • 08:22 PM

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 08, 2025 • 08:22 PM

முன்னதாக அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன் இறுதிப்போட்டிக்கும் அழைத்து சென்றிருந்தார்.

அதேசமயம் இப்போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஷஷாங்க் சிங் 3 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்திருந்தது. இருப்பினும் ஸ்ரேயாஸின் அதிரடியான ஆட்டம் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இருப்பினும் அந்த போட்டியில் ஷஷாங்க் சிங் ஆட்டமிழந்ததை அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அவர் மீது மிகுந்த கோபமடைந்தார், அப்போது அவர் ஷஷாங்கிடம் சில மோசமான வார்த்தைகளையும் கூறியிருந்தார். 

மேலும் அச்சம்பவம் குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியடு. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஷஷாங்க் சிங் மௌனம் கலைத்துள்ளார். இதுகுறித்து பேசிய ஷஷாங்க், “நான் அதற்கு தகுதியானவன் தான், ஸ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும். அச்சம்பவத்தால் இறுதிப் போட்டி வரை என் தந்தை என்னுடன் பேசவில்லை. ஏனெனில் அந்த இடத்தில் நான் மிகவும் அசட்டையாக இருந்துவிட்டேன். 

Also Read: LIVE Cricket Score

மேலும் அது ஆட்டத்தின் ஒரு முக்கியமான நேரம், நான் உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று ஷ்ரேயாஸ் தெளிவுபடுத்தினார், ஆனால் பின்னர் அவர் என்னை இரவு உணவிற்கு வெளியே அழைத்துச் சென்றார்” என்று கூறிவுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் ஒருவராக ஷாஷங்க் இருந்துள்ளார். அவர் 17 போட்டிகளில் விளையாடி 7 அரைசதங்களுடன் 350 ரன்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement