இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் சாய் சுதர்ஷனை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி! (Image Source: Google)
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாய் சுதர்ஷனை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் சாய் சுதர்ஷன் 9 போட்டிகளில் 456 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்த்க்கது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சாய் சுதர்ஷன், “சாய் சுதர்சன் என்ற இந்த இளைஞனை நான் எல்லா வகையான ஆட்டங்களிலும் பார்க்கிறேன். அவர் ஒரு தரமான வீரர் போல் தெரிகிறார், அதனால் இந்திய அணி தேர்வில் என் கண்கள் நிச்சயமாக அவர் மீது இருக்கும். மேலும் இங்கிலாந்தில் உள்ள நிலைமைகளில் இடது கை வீரராக அவரது யுக்திகள், அவர் விளையாடும் விதம் ஆகியவை நிச்சயம் இந்திய அணிக்கு பெரும் சாதகமாக இருக்கும்.
மேற்கொண்டு இங்கிலாந்து நிலைமைகளைப் பொறுத்து நான் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரையும் தேர்வுசெய்வேன். எந்த இடது கை வீரர் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதைக் கவனித்துக் கொண்டே இருப்பேன், மேலும் ஆறாவது (பந்துவீச்சு) விருப்பமாக அவரை உள்ளே தள்ள முயற்சிப்பேன். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக வெள்ளைப் பந்து நிபுணராகக் கூட இருக்கலாம். அர்ஷ்தீப் சிங் போன்ற ஒருவரை 'வெள்ளைப் பந்து நிபுணர்' என்று சொல்வதில் எனக்கு விருப்பமில்லை.
அவருடைய ரெட்-பால் சாதனையையும், அவர் எத்தனை ஓவர்கள் வீசுகிறார் என்பதையும் நான் உன்னிப்பாகக் கவனிப்பேன். எனக்காக அவர் 15-20 ஓவர்கள் வீச முடிந்தால், அவர் அந்த வரிசையில் இடம்பெறலாம், ஏனென்றால் அவருக்கு அந்த மனநிலை இருக்கிறது. அதேபோல் கலீல் அஹ்மதும் இருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவருடைய ரிதம் நன்றாக இருக்கிறது, அவர் நன்றாக பந்து வீசுகிறார். எனவே அவரும் அணித் தேர்வுக்கான கலவையில் இருப்பார் என்று தோன்றுகிறது.
Also Read: LIVE Cricket Scoreமேலும் தற்போது அபாரமான ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. அனால் அவருடன் கம்பேக் மிகவும் சவாலானதாக இருக்கும். ஏனெனில் வெள்ளைப்பந்தில் சிறப்பாக செயல்படும் அவரால், மீண்டும் சிகப்பு பந்தில் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தேவையான மற்ற வீரர்கள் யார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News