
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் இணைந்த ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்திய நிலையில், விராட் கோலி 52 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷுப்மன் கில்லுடன் இணைந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷுப்மன் கில் தனது 7ஆவது சதத்தை பதிவுசெய்து அசத்திய நிலையில், அதற்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியின் மூலம் அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 2500 ரன்களைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.
Brilliant, Shubman Gill!
— CRICKETNMORE (@cricketnmore) February 12, 2025
Live #INDvENG Score @ https://t.co/6HmcQuRmGo pic.twitter.com/d45jCS82l2