
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இந்தூரில் தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ராவிற்குப் பதிலாக பிரஷித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார்.
இதே போன்று ஆஸ்திரேலியாவில் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், பேட் கம்மிஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹசல்வுட் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், கடந்த போட்டியில் 71 ரன்கள் எடுத்த கெய்க்வாட் இந்தப் போட்டியில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்து வருகின்றனர். இதற்கிடையில் மழை குறுக்கீடு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.