
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து இந்த டெஸ்ட் தொடருக்கான இரு அணி வீரர்களையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. அதன்படி தற்மயம் இப்போட்டிக்கான இந்திய டெஸ்ட் அணி சென்னை வந்தடைந்ததுடன், பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் வங்கதேச அணியும் இன்று இந்தியா வந்தடைவதுடன், நாளை முதல் பயிற்சியை தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்பிறகு இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது அக்டோபர் 7ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில்லிற்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் அவர் இந்திய டெஸ்ட் அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். மேலும் அவரை அடுத்தடுத்த தொடர்களுக்கௌ தக்கவைக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.