Advertisement
Advertisement
Advertisement

தாயகம் திரும்பிய இந்திய வீரர்கள்; குத்தாட்டம் போட்ட சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி!

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன்பட்டம் வென்ற இந்திய அணி வீரர்கள் இன்று நாடு திரும்பிய நிலையில், அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தாயகம் திரும்பிய இந்திய வீரர்கள்; குத்தாட்டம் போட்ட சூர்யகுமார் யாதவ்!
தாயகம் திரும்பிய இந்திய வீரர்கள்; குத்தாட்டம் போட்ட சூர்யகுமார் யாதவ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 04, 2024 • 11:40 AM

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேற்கொண்டு கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியானது 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 04, 2024 • 11:40 AM

இதனையடுத்து நாடு திரும்ப இருந்த இந்திய அணி வீரர்கள் புயல் காரணமாக வெஸ்ட் இண்டீஸிலேயே தஞ்சமடைந்தனர். இதனையடுத்து பிசிசிஐயின் சிறப்பு ஏற்படின் காரணமாக இந்திய அணி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஆதரவு ஊழியர்கள், பிசிசிஐ அதிகாரிகள் என முழு குழுவும் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலம் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர்.

Trending

அதன்படி டி20 உலகக்கோப்பையுடன் டெல்லி வந்தடைந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக விமான நிலையில் ஏராளமான ரசிகர்கள் வழிநெடுவே இந்திய வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மேற்கொண்டு தங்கும் விடுதிக்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு அங்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த நடனக்கலைஞர்களுடன் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவும் நடனமாடி அசத்தினார். 

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதைத்தொடர்ந்து உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்கள் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கவுள்ளனர். இதையடுத்து மும்பை செல்லும் இந்திய அணியானது மாலை 5 மணியளவில் கடற்கரை சாலை முதல் வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை திறந்தவெளி பேருந்தில் ரோட் ஷோவும் நடத்தவுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement