Advertisement

IND vs ENG: ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்கள்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

Advertisement
IND vs ENG: ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்கள்!
IND vs ENG: ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் இறங்கிய இந்திய வீரர்கள்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 04, 2025 • 09:53 AM

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 04, 2025 • 09:53 AM

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கு தொடர் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Trending

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் நேற்றைய தினம் நாக்பூர் வந்தடைந்த நிலையில், இன்று தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான படுதோல்வியைச் சந்தித்துள்ள இந்திய அணியானது, இத்தொடரின் மூலம் தங்கள் வெற்றி பாதைக்கும் திரும்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பயிற்சியாகவும் இது அமையும். 

அதேசமயம் சமீப காலங்களில் மோசமான ஃபார்ம் காரணமாக விமர்சனங்களைச் சந்தித்து வரும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி, ஷுப்மன் கில் ஆகியோர் இந்த ஒருநாள் தொடரின் மூலம் தங்கள் ஃபார்மை மீட்டெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டு அணியில் இடம்பிடித்திருக்கும் குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமியின் கம்பேக் எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இதுதவிர்த்து அறிமுக வீரர்களான அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் ஒருநாள் தொடரிலும் அவர்களின் ஆதிக்கம் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேசமயம் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இந்த தொடரின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: Funding To Save Test Cricket

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement