நம் நாட்டை பெருமைப்படுத்த ஒரு கடைசி வாய்ப்பு - கௌதம் கம்பீர்!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றடைந்துள்ளது.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை சமன்செய்ய முடியும் என்ற நிலையில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணி நேற்றைய தினம் லண்டன் சென்றடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து வீரர்கள் இன்று மற்றும் நாளை பயிற்சி அமர்வுகளில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக லண்டன் சென்றடைந்த இந்திய அணி வீரர்களுக்கு லண்டனில் உள்ள இந்திய தூரகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வின் போது இந்திய அணி கேப்டன் ஷுப்மான் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் தங்கள் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட்டை இந்திய கௌரவ தூதர் திரு. விக்ரம் துரைசாமி மற்றும் துணை தூதர் திரு. சுஜித் கோஷ் ஆகியோருக்கு வழங்கினர். அப்போது பேசிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், “இங்கிலாந்து சுற்றுப்பயணம் எப்போதும் உற்சாகமாகவும் சவாலாகவும் இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றை ஒருபோதும் மறக்க முடியாது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு முறையும் எங்களுக்குக் கிடைத்த ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். நமக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. நாம் கடைசியாக ஒரு முயற்சி செய்ய வேண்டும். இது நம் நாட்டை பெருமைப்படுத்த ஒரு கடைசி வாய்ப்பு. ஜெய் ஹிந்த்" என்று தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களை பிசிசிஐ தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது, அதன் பிறகு இந்திய அணி பதிலடி கொடுத்து இரண்டாவது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின் மூன்றாவது டெஸ்டை இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 2-1 என்ற முன்னிலை பெற்ற நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிரௌலி, லியாம் டௌசன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஒல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்க், கிறிஸ் வோக்ஸ்.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், நாராயண் ஜெகதீசன்.
Win Big, Make Your Cricket Tales Now