
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் அணியின் மூத்த வீரர்கள் மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.
இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்று பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். முன்னதாக தனிப்பட்ட கரணங்களால் இத்தொடரின் ஏதேனும் ஒரு போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேற்கொண்டு ரோஹித் சர்மா விலகும் தகவலையில் செய்தியாளர் சந்திப்பின் போது தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் உறுதிசெய்தார்.
இதுகுறித்து பேசிய அவர்,”ஆஸ்திரேலிய தொடரில் ஏதெனும் ஒரு போட்டியில் ரோஹித் சர்மா விலகுவார் என்பது குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. ஆனால் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். ஆனால் அவர் தொடர் முழுவது விளையாடுவார் என்று நம்புகிறோம். இருப்பினும் இந்த அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், கேஎல் ராகுல் உள்ளிட்டோரும் இப்பதால், ரோஹித் சர்மாவின் இடத்தை அவர்கள் நிச்சயம் நிரப்புவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.