
Anderson-Tendulkar Trophy: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற முயற்சிப்போம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதனால் இப்போட்டியிலும் அந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலையை தக்கவைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. மறுபக்கம் இந்திய அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “இந்தியா ஒரு நல்ல அணி. அவர்கள் எப்போதும் கடுமையாகப் போராடுவார்கள், கடுமையாகத் திரும்பி வருவார்கள் என்று நினைக்கிறேன். சர்வதேச விளையாட்டு வீரர்களின் தோள்களில் எப்போதும் அழுத்தம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்தியாவுக்காக விளையாடும் நிச்சயமாக மற்ற அணிகளை காட்டிலும் சற்று அதிகமாக இருக்கலாம்.