
ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரார்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது செயல்பாடுகள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறியதன் காரணமாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவர் மீதும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு மத்தியில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அவர்களுக்கு ஆதரவளித்துள்ளார். அதிலும், இந்த இரண்டு வீரர்களும் இந்தியாவுக்காக நிறைய செய்துள்ளதாகவும், இத்தொடரில் அவர்களின் பேட்களில் இருந்து ரன்கள் வரவில்லை என்றாலும், அவர்கள் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங், “நாங்கள் எங்கள் சிறந்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவைப் பற்றி பேசுகிறோம். நாங்கள் அவர்களைப் பற்றி மிகவும் மோசமாகப் பேசுகிறோம். மக்கள் கடந்த காலத்தில் சாதித்ததை மறந்து விடுகிறார்கள். அவர் நம் காலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாவர். சரி, அவர்கள் தோற்றார்கள், அவர்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடவில்லை என்பது உண்மை தான். ஆனால் அதற்காக அவர்கள் நம்மை விட வருத்தப்படுவார்கள்.