
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியாத சூழல் உருவானது. ரவீந்திர ஜடேஜா இல்லாமல் களமிறங்கியது இந்திய அணிக்கு பின்னடைவாகவே இருந்தது. இந்த நிலையில், அவர் தனது முழங்கால் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார்.
இந்திய அணியின் ஜெர்சியினை மீண்டும் அணிவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளது முக்கியத்தும் பெறுகிறது. பிசிசிஐ தொடர்பான நேர்காணலில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நேர்காணலில் அவர் பேசுகையில், “5 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியின் ஜெர்சியை மீண்டும் அணிய உள்ளேன். நான் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் உள்ளேன். இந்தப் பயணத்தில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்துள்ளேன். மீண்டுன் அணியின் ஜெர்சியை அணிவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.