
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை எளிதாக எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்க அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
இம்முறையாவது தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி சாதிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது 245 ரன்கள் குவிக்க பின்னர் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 408 ரன்கள் குவித்து அசத்தியது.
இதன் காரணமாக 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 131 ரன்கள் மட்டுமே குவிக்க இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.