-mdl.jpg)
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஃபீல்டிங்கில் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் கேட்ச் பிடித்ததன் மூலம் இந்திய அணிக்காக அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர் எனும் சாதனையை பெற்றுள்ளார்.
அதன்படி நேற்றைய ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி வீசிய இன்னிங்ஸின் 45ஆவது ஓவரின் நான்காவது பந்தில் மாட் ஹென்றி விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக கேட்ச்சுகாளை பிடித்த ஃபீல்டர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை விராட் கோலி சமன்செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்தப் பட்டியலில், முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் 509 போட்டிகளில் 571 இன்னிங்ஸ்களில் 334 கேட்ச்களை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது விராட் கோலி இந்திய அணிக்காக 548 சர்வதேச போட்டிகளில் 657 இன்னிங்ஸ்களில் விளையாடி 334 கேட்ச்களை பிடித்து அவரின் சாதனையை சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் இவர்கள் இருவர் மட்டுமே 300க்கும் மேற்பட்ட கேட்ச்சுகளை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.