
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. மேலும் இத்தொடரில் இந்திய வீரர் விராட் கோலி அடுத்தடுத்து இரண்டு சதங்களையும் அடித்து அசத்தினார்.
அதேசமயம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 4 இன்னிங்ஸில் மூன்று சதம் விளாசி அசத்து இருக்கிறார். இதன் மூலம் ஒருநாள் தரவரிசை பட்டியலில் மீண்டும் டாப் இடத்திற்கு சென்றுள்ளார்.
அதன்படி ஐசிசி சமீபத்தில் வெளியிட்ட ஆடவருக்கான தரவரிசைப் பட்டியளில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் 887 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா வீரர் வேண்டர் டுசன் 766 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், குயின்டன் டி காக் 759 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், விராட் கோலி 750 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருக்கிறார்.