Advertisement

எங்களிடம் ஆறாவது பந்துவீச்சாளர் ஒருவர் உள்ளார் - விராட் கோலி குறித்து டிராவிட் சூசகம்!

எங்கள் அணியில் தற்போது ஆறாவது வேகப்பந்துவீச்சாளர் இல்லை. ஆனால் எங்களிடம் ஒரு வீரர் இருக்கிறார். அவர் பந்துவீச்சு ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும் என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 04, 2023 • 21:58 PM
எங்களிடம் ஆறாவது பந்துவீச்சாளர் ஒருவர் உள்ளார் - விராட் கோலி குறித்து டிராவிட் சூசகம்!
எங்களிடம் ஆறாவது பந்துவீச்சாளர் ஒருவர் உள்ளார் - விராட் கோலி குறித்து டிராவிட் சூசகம்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நாளை ஞாயிற்றுக்கிழமை பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்தத் தொடரில் நாளைய போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பெற்று விடுவார்கள். இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் இன்று கொல்கத்தாவில் பயிற்சி முகாமில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த போட்டி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். 

அதில் பேசிய அவர் “ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து டிராவிட்டிடம் கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்த பிறகு இந்திய அணி தொடர்ந்து மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடி வருகிறது. இந்த மூன்று வீரர்களுக்கும் வேறு எந்த மாற்று வேகப்பந்துவீச்சாளரும் தற்போது வரை அணியில் இல்லை. 

Trending


இதனால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் பிரசித் கிருஷ்ணாவை ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக சேர்த்தோம். எங்கள் அணியில் தற்போது ஆறாவது வேகப்பந்துவீச்சாளர் இல்லை. ஆனால் எங்களிடம் ஒரு வீரர் இருக்கிறார். அவர் பந்துவீச்சு ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும். ஆனால் நல்ல இன்ஸ்விங்களை வீசக்கூடிய பிரமாதமான நபர். 

அவரை நாங்கள் குறைந்தபட்சம் இரண்டு ஓவர்களுக்காவது பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த போட்டியில் கூட அவர் ஒரு ஓவரை வீச இருந்தார். ரசிகர்களும் அதனை தான் எதிர்பார்த்தார்கள். அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் என்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் விளையாடி வருகிறார்கள். விராட் கோலி எப்போதும் போல் ரிலாக்ஸாக இருக்கிறார். அவர் இந்திய அணிக்காக இதுவரை எப்படி செயல்பட்டு இருக்கிறாரோ அதனை பின்தொடர்வதை விரும்புகிறார். 

விராட் கோலியின் தன்னுடைய போட்டிக்கு தயாராகும் முறையில் இருந்து எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அதேபோல் விராட் கோலி தன்னுடைய 49 வது சதம் குறித்தோ இல்லை ஐம்பதாவது சதம் குறித்தோ இல்லை தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை குறித்து எந்த கவலையும் படவில்லை” என்று டிராவிட் கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement