
ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு தயாராவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே கேஎல் ராகுல் தலைமையில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறி சாதனை படைத்துள்ளது.
அதனால் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ள இந்திய அணி 2023 உலகக் கோப்பையை வெல்ல தயாராக இருக்கிறோம் என்பதையும் காட்டியுள்ளது. இந்த அடுத்தடுத்த வெற்றிகளில் நட்சத்திர துவக்க இளம் வீரர் சுப்மன் கில் முதல் போட்டியில் 74 ரன்களும் 2ஆவது போட்டியில் சதமடித்து 104 ரன்களும் குவித்த முக்கிய பங்காற்றினர்.
கடந்த சில வருடமாகவே ஐபிஎல் தொடரிலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் நிறைய சாதனைகளை படைத்து சச்சின், விராட் கோலி ஆகியோரது வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டாராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பேட்டிங்க்கு சாதகமான இந்தூர் மைதானத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்தும் ஷுப்மன் கில் இரட்டை சதமடிக்கவில்லை என்று விரேந்தர் சேவாக் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.