
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு, பயிற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த 6ஆம் தேதி ரோஹித் சர்மா தலைமையில் 14 வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. தற்போது வீரர்கள் மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அசோசியேஷனின் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
உலகக் கோப்பைக்கு ஏதுவாக பந்து பவுன்ஸ் ஆகும் தன்மை கொண்ட ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் இந்த முன்கூட்டிய பயிற்சி இந்திய அணிக்கு பெரிதும் உதவும். இந்நிலையில், முகேஷ் சவுத்ரி மற்றும் சேத்தன் சக்காரியா இணைந்துள்ளனர். இந்திய அணிக்கு இடக்கை பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் இம்சை கொடுப்பது வழக்கம். அதுவும் இப்போது பெரும்பாலான கிரிக்கெட் அணிகள் தங்கள் அணியில் இடக்கை பந்துவீச்சாளர்களை தவிர்க்காமல் சேர்த்து விடுகிறது.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா என அந்த பட்டியல் நீள்கிறது. அந்தச் சிக்கலை சமாளிக்க இந்த இடக்கை பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வலைபயிற்சியின்போது பந்து வீசுவது சிறந்த பயிற்சியாக இருக்கும்.