அசாம் கான், ஷதான் கான் தேர்வு குறித்த கேள்வி; கடிந்துகொண்ட பாபர் ஆசாம்!
அசாம் கான் மற்றும் ஷதாப் கான் ஆகியோரை பிளேயிங் லெவனில் சேர்த்தது குறித்த கேள்விக்கு பாபர் ஆசாம் கேபத்துடன் பதிலளித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
![Bharathi Kannan Bharathi Kannan](https://img.cricketnmore.com/uploads/2021/03/bk.jpg)
![Watch - Babar Azam Got Angry On Journalist Azam Khan And Shadab Khan T20 World Cup 2024! அசாம் கான், ஷதான் கான் தேர்வு குறித்த கேள்வி; கடிந்துகொண்ட பாபர் ஆசாம்!](https://img.cricketnmore.com/uploads/2024/06/watch-Babar-Azam-got-angry-on-journalist-Azam-Khan-and-Shadab-Khan-t20-world-cup-2024-lg1-lg.jpg)
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முடிவில் முதல் மற்றும் மூன்றாவது போட்டியானது மழையால் கைவிடப்பட்டும், இரண்டாவது மற்றும் நான்காவது டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றும் அசத்தியது. இதன்மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அபாரமான தொடக்கத்தைப் பெற்ற பாகிஸ்தான் அணியானது, அதன்பின் மளமளவென விக்கெட்டுகளை இழந்து போதிய ரன்களைச் சேர்க்காததே தோல்விக்கு மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கு பிறகு செய்தியாளர் சந்தீப்பின் போது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாமிடம், அசாம் கான் மற்றும் ஷதாப் கான் ஆகியோரை பிளேயிங் லெவனில் சேர்த்தது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதனால் அவர் கோபமடைந்து பத்திரிகையாளர்களை கண்டித்து பதிலளித்தார்.
Trending
இதுகுறித்து பேசிய பாபர் அசாம், “அணியில் எந்தவொரு வீரரும் கேப்டனின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யப்படவில்லை. அனைவரும் தகுதி அடிப்படையில் அணிக்கு வந்துள்ளனர். பாருங்கள், ஒரு வீரர் செயல்பட முடியாதபோது, அந்த வீரர் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக நாங்கள் உணர்கிறோம், நீங்கள்தான் இவற்றைச் செய்கிறீர்கள். இதை பெரிதுபடுத்தி கொண்டு வருபவர்கள் நீங்கள் தான்.
Babar Azam on selecting Azam Khan & Shadab Khan:
— Farid Khan (@_FaridKhan) May 31, 2024
"When we don't select a player, you ask us why did we not select him. And then when we select him, you ask us why was he selected"#T20WorldCup #ENGvPAK pic.twitter.com/Zs7igkZgE6
நாங்கள் ஒரு வீரரைத் தேர்ந்தெடுக்காதபோது, அவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேட்கிறீர்கள். பின்னர் நாங்கள் அவரைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று எங்களிடம் கேட்கிறீர்கள். அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் துணை நிற்க வேண்டும்” என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாபர் ஆசாமின் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அசாம் கான் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் அடுத்தடுத்துர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்தனர். அதேபோல் அசாம் கான் கீப்பிங்கின் போது எளிதான கேட்ச்சுகளை கூட தவறவிட்டது பெரும் விமர்சனத்திற்கு வழிவகுத்திருத நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது அதுகுறித்த கேள்விகள் எழுப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now