
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று அறிவித்தார். தென் ஆப்பிரிக்க தொடரை இழந்ததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்
அனைத்து நல்ல விசயங்களும் முடிவுக்கு வரும் என்பதை குறிப்பிட்ட கோலி, தனது கேப்டன் பயணமும் முடிவுக்கு வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் 4 வீரர்கள் போட்டியில் உள்ளனர். அவர்கள் யார் என்பதை காண்போம்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மாவுக்கே டெஸ்ட் போட்டியில் கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா கேப்டனாக தனது திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார். டெஸ்டிலும் கடந்த ஆண்டு இந்தியாவுக்காக அதிக ரன்களை அடித்துள்ளார். ஆனால் கிரிக்கெட்டின் 3 பிரிவுகளிலும் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தால், அவருக்கு சுமை அதிகரிக்கும் என்ற கருத்தே தற்போது அவருக்கு பாதகமாக உள்ளது.