
ஐசிசி உலக கோப்பை தொடரில் இன்று தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் வலுவான இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் 50 ஓவர்கள் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு சுமாராக செயல்பட்டு 49.3 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 41, ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 200 ரன்களை இந்தியா அசால்டாக அடித்து நொறுக்கும் என்று எதிர்பார்த்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.
ஏனெனில் மிட்சேல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே இஷான் கிசான் ஸ்விங் பந்தை கணிக்க முடியாமல் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட்டானார். அதை விட அடுத்த ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா 6 பந்துகளை எதிர்கொண்டு ஹேசல்வுட் வேகத்தில் டக் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.