
அடுத்தடுத்து ஆட்டமிழந்த ஷுப்மன், ரோஹித், ஸ்ரேயாஸ்; ரஷிகர்கள் ஷாக்! (Image Source: Google)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் முன்னேறின. அதன்படி இன்று அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணிக்கு ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் வழக்கம் போல ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடத் தொடங்கினார். ஆனால், ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கில் துடிப்பாக இருந்தது. முதல் மூன்று ஓவர்களில் மட்டும் ஐந்து பவுண்டரிகளை தடுத்து மிரட்டியது. இந்த சூழ்நிலையிலும் ரோஹித் சர்மா பவுண்டரிகளை அடித்து நம்பிக்கை அளித்தார்.