பார்டர் கவாஸ்கர் கோப்பை 2024-25: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நாளை (டிசம்பர் 26) வியாழக்கிழமை முதல் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலிய அணியின் தங்கள்து அணியின் பிளெயிங் லெவனை இன்று அறிவித்துள்ளது. அதேசமயம் இந்திய அணியிலும் சில மாற்றங்களும் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடும் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது பெயரில் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
2024ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்