Advertisement

Asian Games 2023: ஜெய்ஸ்வால் அபார சதம்; அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!

நேபாள் அணிக்கெதிரான ஆசிய விளையாட்டு போட்டியின் காலிறுதிச்சுற்று கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.   

Bharathi Kannan
By Bharathi Kannan October 03, 2023 • 11:47 AM
Asian Games 2023: ஜெய்ஸ்வால் அபார சதம்; அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!
Asian Games 2023: ஜெய்ஸ்வால் அபார சதம்; அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா! (Image Source: Google)
Advertisement

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடந்து வருகிறது. இதில், மகளிர் மற்றும் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியும் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தங்கம் கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது ஆண்களுக்கான டி20 போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா காலிறுதிப் போட்டியின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய முதல் காலிறுதிப் போட்டியில் நேபாள் அணிக்கு எதிரான முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உள்பட 100 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்தார்.

Trending


ருதுராஜ் கெய்வாட் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த திலக் வர்மா 2 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 5 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் ஷிவம் துபே மற்றும் ரிங்கு சிங் இருவரும் கடைசியாக வந்து அதிரடியாக விளையாடினர். வழக்கம் போல் கடைசி ஓவரில் ரிங்கு சிங் சிக்ஸர்களாக விளாசித்தள்ளினார். 20ஆவது ஓவரில் மட்டும் ரிங்கு சிங் 4, 6, 4, 1, 6, 2 என்று ரன்கள் குவித்தார்.

இறுதியாக ரிங்கு சிங் 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று ஷிவம் துபேவும் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. நேபாள் அணி தரப்பில் திபெந்திர சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாள் அணிக்கு குஷால் புர்டெல் 28 ரன்களையும், ஆசிஃப் ஷேக் 10 ரன்களுக்கும், ரோஹித் பௌடெல் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த குஷால் மல்லா - திபேந்திர சிங் ஐரி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

பின் குஷால் மல்லா 29 ரன்களுக்கும், திபேந்திர சிங் 32 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சந்தீப் ஜோரா அதிரடியாக விளையாடி 1 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 29 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களால் போதிய ரன்களைச் சேர்க்க முடியாமல் திணறினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் நேபாள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தி, ஆசிய விளையாட்டு போட்டிகளின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement