dayalan hemalatha
BANW vs INDW, 5th T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி!
இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய மகளிர் அணி நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ஸ்மிருதி மந்தனா - தயாளன் ஹேமலதா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 30 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.