Captain rohit sharma
நாக்பூரில் சதமடித்தது எப்படி- மனம் திறந்த ரோஹித் சர்மா!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான வார்னர், கவாஜா, ஸ்மித், லபுஷேன் ஆகியோரே அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.
அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் சதத்தின் மூலமாகவும், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரது அரைசதங்கள் மூலமாகவும் 400 ரன்களை குவித்தது. இதில் ரோஹித் சர்மா மட்டும் ஏதோ வேறு பிட்ச்சில் பேட்டிங் விளையாடியது போன்று இருந்தது. இதன்மூலம் கேப்டனாக 3 ஃபார்மட்டிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.