In group
மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்த ரோஹித் சர்மா; காரணம் என்ன?
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.
இந்த படுமோசமான தோல்வியின் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 10 ரன்களுக்கு மேல் எடுக்காமல் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக சிட்னி டெஸ்ட் போட்டியிலும் அவர் பிளேயிங் லெவனில் இருந்து விலகினார்.
Related Cricket News on In group
-
ரஞ்சி கோப்பை 2024-25: சௌராஷ்டிராவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை மீண்டும் கைப்பற்றியது டாடா நிறுவனம்!
ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை 5 ஆண்டுகளுக்கு ரூ.2500 கோடி கொடுத்து மீண்டும் டாடா நிறுவனம் தக்க வைத்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து விலகும் டாடா குழுமம்!
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள சூழலில் 2024ஆம் ஆண்டுக்கான தொடருக்காக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24