Indian u19 team
அண்டர் 19 உலகக்கோப்பை: இந்திய அணியில் நால்வருக்கு கரோனா உறுதி!
வெஸ்ட் இண்டீஸில் அண்டர் 19 உலகக் கோப்பை தொடரின் 14ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 2ஆவது ஆட்டத்தில் நேற்று அயர்லாந்து அணியையும் வென்றது.
ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும், வீரர்களுக்கு ரேபிட்-கரோனா பரிசோதனையும், அதில் பாஸிட்டிவ் இருந்தால், பிசிஆர் பரிசோதனையும் செய்யப்படும். இந்திய வீரர்களுக்கு நேற்றைய போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆன்ட்டி ரேபிட் பரிசோதனையில் கேப்டன் யாஷ் துல், துணைக் கேப்டன், எஸ்.கே.ரஷீத், கர்நாடக வீரர் அஸ்வின் கவுதம், ஹரியானா வீரர் கர்வ் சங்வான் ஆகியோருக்கு ரேபிட் டெஸ்டில் பாசிட்டிவ் வந்தது.