Madan lal
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்த மதன் லால்!
நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சஞ்சு சாம்சனை பேக்கப் வீரராக சேர்த்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில் இந்திய அணி தேர்வின்போது பேசிய ரோஹித் சர்மா, “இந்திய வீரர்கள் யார் எந்த இடத்தில் வேண்டுமானால் விளையாட முன்வர வேண்டும். இதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் எனது இடம், இதுதான் பேட்டிங் செய்ய எனக்கு சிறந்த இடமென யாரும் சொல்லக்கூடாது” எனக் கூறியிருந்தார்.