Rcb vs lsg
ரன் அவுட்டை தவறவிட்ட ஹர்ஷல் படேல்; ரசிகர்கள் விமர்சனம்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டமான ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று பரபரப்பாக முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி கேப்டன் பாப் 79*, விராட் கோலி 61, மேக்ஸ்வெல் 59 ஆகியோரது அதிரடி ஆட்டத்தால் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ஓவருக்கு 212 ரன்கள் குவித்தது.
இதற்கு அடுத்து விளையாடிய லக்னோ அணி ஆரம்பத்திலேயே மேயர்ஸ், தீபக் ஹூடா, குர்னால் பாண்டியா ஆகியோர் விக்கட்டுகளை இழந்து விட்டது. இதற்குப் பிறகு கே எல் ராகுலுடன் இணைந்த ஸ்டாய்னிஸ் அபாரமாக விளையாடி 30 பந்தில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். உடனே கே எல் ராகுலும் கிளம்பினார்.