Temba bavuma
இந்திய ஸ்பின்னர்களை விளையாடுவதில் சோதிக்கும் விதமாக அமையும் - டெம்பா பவுமா!
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் தென் ஆப்பிரிக்க அணியும், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தோல்வியே இல்லாமல் பயணிக்கும் இந்திய அணியும் இன்று நடைபெறும் போட்டியில் மோதவுள்ளனர்.
இரு அணிகளும் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் தரமான சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக விளையாடுவது தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சோதிக்கும் விதமாக அமையும் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.