Thisara perera
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் - திசாரா பெரேரா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் இத்தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா - கனாடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதேசமயம் இந்திய அணி இடம்பிடித்துள்ள குழுவில், பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஏதேனும் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக இலங்கை முன்னாள் வீரர் திசாரா பெரேரா தெரிவித்துள்ளார்.