Sanju Samson - ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன், பயிற்சியை முடித்து மைதானத்தில் இருந்து வெளியே வந்த போது ரசிகர்கள் அவரை காண காத்திருந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10ஆம் தேதி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இதனையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த வெள்ளிக்கிழமை துபாய் சென்றடைந்தது. துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் வீரர்களின் பயிற்சி அமர்வு நடந்து வருகிறது. இதற்கிடையில், பயிற்சி அமர்வுக்குப் பிறகு, பயிற்சியை முடித்துவிட்டு சஞ்சு சாம்சன் வெளியே வருவதைக் கண்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தபோது ஒரு வேடிக்கையான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

அங்கு பயிற்சியை முடித்து வெளியே வந்த சஞ்சு சாம்சனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை வழங்கினர். அதன் போது, ​​சூர்யகுமார் யாதவ் சாம்சனை 'உள்ளூர் பையன்' என்று நகைச்சுவையாக அழைத்தார். துபாயில் உள்ள ரசிகர்கள் சஞ்சுவை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை இந்த காணொளியின் மூலம் அறியலாம். இருப்பினும் இந்த ஆசிய கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் உள்ளனர்.

அவர் இந்தியாவுக்காக சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடந்த 17 இன்னிங்ஸ்களில் அவரது சராசரி 32.78 ஆக உள்ளது, இந்த நேரத்தில் அவர் மூன்று சதங்களையும் அடித்துள்ளார். இருப்பினும், இந்த முறை சுப்மான் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாட கூடிய ஜித்தேஷ் சர்மாவும் அணியில் உள்ளார்.

இதனால் சஞ்சு சாம்சன் அணியின் லெவனில் இடம்பெருவாரா என்ற கேள்விகளூம் உள்ளன.அதே நேரத்தில், முன்னாள் இந்திய கேப்டனும் புகழ்பெற்ற தொடக்க வீரருமான சுனில் கவாஸ்கர் சமீபத்தில் சஞ்சு சாம்சன் குறித்து ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டார். சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டால், அவரை ரிசர்வ் இடத்தில் வைத்திருப்பது பொருத்தமானதல்ல என்று அவர் கூறி இருந்தார்.

Also Read: LIVE Cricket Score

இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், "சஞ்சு சாம்சன் போன்ற ஒரு வீரரை நீங்கள் முக்கிய அணியின் ஒரு பகுதியாக மாற்றினால், அவரை வெளியே வைத்திருப்பது தவறு. அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய முடியும், தேவைப்பட்டால் ஆறாவது இடத்தில் ஃபினிஷராகவும் விளையாட முடியும். ஜிதேஷ் சமீபத்தில் அற்புதமாக விளையாடியுள்ளார், இது தேர்வாளர்களுக்கு ஒரு சிக்கலை உருவாக்கியுள்ளது" என்று கூறியுள்ளார். 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News